Sree Selva Vinayagar Kumbabishega & விளக்குபூஜை News 24-25th February 2021

Sree Selva Vinayagar Kumbabishega & விளக்குபூஜை News 24-25th February 2021

அனைவருக்கும் வணக்கம் எனது நெஞ்சில் மற்றும் மருங்கூர் மக்களின் நெஞ்சில் ஒரு நீண்ட வரலாறு கொண்ட செட்டியார் அய்யா அவர்கள் குடும்பம் மூலம் நமது ஊரில் அழகான விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது மேலும் பல உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் வெளியூர் நபர்கள் மூலம் பல்வேறு வகையான உதவிகள் கிடைத்தன.எதிர்வரும் பங்குனி மாதத்தில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது எனவே மருங்கூர் மக்களாகிய நாம் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் நிறை குறைகளைக் கடந்து விநாயகரை நமது வீட்டின் தெய்வ குழந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த மனித பிறவியில் நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று பெருமை பட்டுக்கொண்டு எந்த தீயசெயல்கள் தீயசக்திகள் செய்ய இடம் கொடுக்காமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முப்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்ககூடிய வரலாற்று நிகழ்வில் பங்கேற்கலாம் வாருங்கள் என்று அன்புடன் மருங்கூரில் பிறந்தவன் என்ற முறையில் அழைக்கிறேன் மேலும் இவை அனைத்திற்கும் காரணமாக விநாயகரின் சக்தி வாய்ந்த அருளால் முப்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து மருங்கூர் வந்து மகத்தான இந்த ஆன்மீக விழாவிற்கு அடித்தளமிட்ட உயர் திரு பாண்டுரங்கன் செட்டியார்அய்யா உயர் திரு சிவஞானம் செட்டியார் அய்யா திருமதி பத்மா அக்கா திருமதி சித்ரா தேவி அக்கா உள்ளிட்ட இந்த ஆன்மீக விழாவிற்கு இந்த ஆலயத்தில் ஓசை எழுப்பும் ஆலயமணி மற்றும் அன்னதானம் வழங்க பேருதவி புரிந்த உயர் திரு ரகுபதி அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து குடும்ப மக்களின் செல்வம் பெருக இறைவன் அருளால் அருளட்டும் என்றும் இறைபணியில் பார்த்திபன் . ஆசிரியர்.🙏🙏🙏💐💐💐

 

 

 

 

 

 

நம்ம கோவிலுக்கு வயரிங் செய்யகூடிய பெங்களுர் குமார் அண்ணன் அவர்கள் காளையார்கோவில் வந்து இறக்கிவிட்டார்.. காலை 8 மணியளவில் அவருடைய பணி தொடங்க இருக்கிறார்…

நகரத்தார் சமூகத்தை நாம் வணங்குவோம். (சேகரன்)

தனிகுடும்பமாக காசி செல்பவர்களுக்கு சிறு தகவல்… :

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.

– ஒன்று எங்கே தங்குவது?

– இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?

இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!
அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

– அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

– சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi – 221 001 (U.P)
Telephone Nos: 0542 – 2451804,
Fax No: 0542 – 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

– கட்டணம் உண்டா?

உண்டு!

தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர்.

உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே!

குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன.

பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன.

மூன்று விதமான அறைகள் உள்ளன.

1. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்;

2. அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள்.

3. மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன.

சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.
மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மற்ற சமயங்களில் இருக்காது.

தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள்.

அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும்.

உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு.

அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.
இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம்.

கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்.

டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்.

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது. Full Gen Set வசதி உண்டு.
சரி, #உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன.

இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர்.

சைவ உணவுகள் மட்டுமே.
நம்பிச் சாப்பிடலாம்.
ருசியாக இருக்கும்.

1. காலைச் சிற்றுண்டி:

நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி – அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே.

2. மதிய உணவு:

நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம்.

90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம்.

சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு.

4. இரவு உணவு:

7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே.

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.

2 முறை அங்கே தங்கி இருக்கிறேன்..‌
முக்கியமாக” நாட் கோட் சத்தர் ” என்றால் தான் ஆட்டோ ரிக்ஷா வாலா விற்கும் புரியும்.

விஸ்வநாதரின் காலை மற்றும் இரவு பூஜை பொருட்கள் இங்கிருந்து ஊர்வலமாக செல்லும்.
நாமும் கலந்து கொள்ளலாம்.

சத்திரம் உள்ளேயே நாகேஸ்வரர் , பஞ்ச லிங்க சிவன் கோயில் கள் உண்டு.

நகரத்தாரின் பல ஆண்டுகளாக இறை சேவை

இது ஒரு நண்பரின் மறு பகிர்வு..

ஓம் சிவயநம:🙏🌹🙏🕉️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *